}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

April 16, 2011

ராபியத்துல் பஸ்ஸரியா கேட்ட துஆ


"எனது இறைவா!இம்மையில் நீ எனக்கு அளிக்க விரும்பும் கருணைகளை நீ உன் நேசர்களுக்கு வழங்குவாயாக!
எனக்கு நீயே போதுமானவன்.இறைவா!இம்மையிலும்,மறுமையிலும் அனைத்துக்கும் மேலாக நான் உன்னையே நேசிக்க விரும்புகின்றேன்.மற்ற யாவும் விடுத்து உன்னையே சந்திக்க விரும்புகின்றேன்.
இறைவா!நான் நரகவேதனை விட்டும் நீங்குவதற்காக நான் உன்னை வணங்கினேயானால் என் தங்கும் இடம் நரகமாகட்டும்.நான் மரித்தபின் என்னை நரகத்தில் விட்டு அந்த நரகம் முழுதும் நிரம்பும் படியாக என் உடம்பை பெரிதாக்கி மற்ற எவரையும் நரகில் போட இயலாதாவாறு ஆக்குவாயாக!
இறைவா!சுவர்க்கத்தின் இன்பத்தினை அடையும் பொருட்டு நான் வணங்கினேயானால் எனக்கு அந்த சுவர்க்க வாசல் அடைபடட்டும்.
இறைவா!உன்னையே அடைய நான் வணங்கினேயானால் உனது அழிவற்ற தரிசனத்தை விட்டும் என்னை விட்டுவிடாதே"

சுப்ஹானல்லாஹ்.வரலாறு போற்றும் அந்த பக்திமான் ,உயர்ந்த பெண்மணி இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் கூட சுக
வாழ்வை நாடாமல் அவர்கள் இறைவனை அடையும் அவாவை எண்ணும் போது நமது கல்பு சிலிர்க்கின்றது.


Thanks;  umar hatha abusaud.

March 30, 2011

ஒன்பது கட்டளைகள்

                                                             

1.மறைவிலும் ,வெளிப்படையிலும் இறைவனை அஞ்ச வேண்டும்.

2.கோபத்திலும்,அமைதியிலும் நீதியாக நடக்க வேண்டும்.

3.வறுமையிலும்,வளமையிலும் நடுநிலை பேண வேண்டும்.

4. நம்முடன் உறவுகளை முறிப்பவர்களுடன், நாம் உறவை பேண வேண்டும்.

5.நம்மிடமிருந்து பறிப்பவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

6.நமக்கு அநீதி இழைப்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும்

7.நம் மவுனம் தியானமாக ஆகி விட வேண்டும்

8.நம் வாய்மொழிகள் யாவும் இறைவனை நினைவு கூர்வதாய் இருக்க வேண்டும்.

9.நம் பார்வை கூர்மை உள்ளதாய் இருக்க வேண்டும்.

ஆதார நூல் ;  முஸ்லிம்










March 18, 2011

வெளி நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவை.



திரு குர் ஆன் திலாவத்.


(N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்! இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்


சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது செய்தி கட்டிங்கை என் நண்பர் அனுப்பிவைத்தார் அந்த. பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.


வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!

எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்றும் சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாவது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் பின்னர் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்பது அவரது குடும்பம்தான்.



இதுதொடர்பான கருத்துக்களை கல்ஃப் நியூஸில் படிக்க இங்கே க்ளிக் செய்து பாருங்க...

இறப்பு செலவு பட விளக்கத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்.


நீங்கள் படித்தவற்றை முடிந்தவரைக்கும் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது மிக அவசியம். அதனால் இந்த செய்தி உபயோகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அல்லது இந்த பதிவிற்க்கான லிங்கை அனுப்பி வையுங்கள் . வாழும் வரை சந்தோஷமாக வாழ கற்றுக்கொண்டு பிறரையும் சந்தோஷமாக வாழவிடுங்கள்.



நன்றி;அவர்கள் உண்மைகள் வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்டது

October 10, 2010

பிறரை பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக்கூடாது.

                                                 
மற்றவர்களை பயமுறுத்தியோ ஏமாற்றியோ கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது என்று மார்க்கம் நமக்கு பணிக்கிறது. 
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சில தோழர்கள் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளை அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) தோழர்  கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா ஆதாரம் நூல் : அஹ்மத் (21986)

Thanks; Abdul Rasheed

October 09, 2010

உம்மி நபியை மாமேதையாக்கியது எது?


முதலில் உம்மி என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உம்மி என்றால் தாய் என்பது பொருள். அதாவது தாயை சார்ந்திருப்பவர். கைக்குழந்தைகளே தாயை சார்ந்திருப்பார்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதுகின்ற, படிக்கின்ற விஷயங்களில் தாயை சார்ந்திருப்பவராக அதாவது உம்மி நபியாக இருந்தார்கள்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்மி நபியாக இருந்தது அவர்களுக்கு ஒருபோதும் மதிப்பு குறைவை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேண்மையையே ஏற்படுத்தியது. 

அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் உயர்ந்த இலக்கியத் தரமுடையது. இதுபோன்ற ஒன்றை யாராலும் இயற்ற முடியாது என்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சவால் விடுகின்றான

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்); நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அல்லாஹ் அருளிய குர்ஆனை மக்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களே இட்டுக்கட்டி உள்ளார் என நினைப்பர்கள். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அறிந்திருந்தும் அக்கால மக்கள் நபியவர்கள் மீது குர்ஆனை அவரே இட்டுக் கட்டியுள்ளார் என வீணாகக் கதையளந்தனர். 

“இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:38)

அதுமட்டும்  அல்ல, முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்பதை அந்த மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தினால் நபியவர்கள் வேறொருவரின் துணையுடன் அல்குர்ஆனை எழுதினார்கள் எனக் கூறத் தொடங்கினர். 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அவற்றுள் சில,

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்………(அல்குர்ஆன் 7:157)

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)

எழுதப் படிக்கத் தெரியாது என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்தை அதிகரிக்கும் காரணியாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் உம்மி நபியாக இருந்து அத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது என்பது சாதாரண விஷயமல்ல. அல்லாஹ்வின் வசனங்களே இவ்வனைத்திற்கும் காரணமாக அமைந்துள்ளன. 

அல்குர்ஆன் எனும் கடலில் ஒருவன் மூழ்குவானேயானால் முத்தை விடவும் விலைமதிப்பற்றவைகளை தமது வாழ்வில் பெற்றுக் கொள்வான். அல்குர்ஆனைப் படிக்கப் படிக்க மனிதன் வாழ்வின் எதார்த்த நிலையை உணர்வான். புனித வேதம் அல்குர்ஆன் உலகிலுள்ள எந்த புத்தகத்திற்கும் ஒப்பாகாது. அதன் உரை நடையும் ஏனையவற்றிலிருந்து வித்தியாசப்படும். அதைப் மீண்டும் படிக்கப் படிக்க ஒருபோதும் சலிப்பு எற்படுவதில்லை. 

அல்குர்ஆன் காட்டித் தந்த வழியைக் கடைப்பிடிப்போமேயானால்..ஈருலக வாழ்விலும் எண்னற்ற பயன்களை இறைவன் அருளால் அடைந்து விட முடியும். 

அல்குர்ஆன் மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது பல ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. நல்வழிப்படுத்துகின்றது நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக மனிதனின் சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.

இப்படிப் பட்ட திருமறையை தினமும் படித்து நல்வழியை அடைவோமாக.

thanks ; Tntj

September 13, 2010

14ஆவது துபாய் சர்வதேச குர்ஆன் போட்டி.

துபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மேர்பை வெற்றி
 
குர்ஆன் செயற்பாட்டுக் குழு: 14ஆவது துபாய்  சர்வதேச குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த போட்டியாளர் முஹம்மத் இர்சாத் மேர்பை முதலிடம் பெற்று 250,000 திர்ஹம் பணப்பரிசைப் பெற்றுக் கொள்ள, பங்களாதேசைச் சேர்ந்த மஸ்ஊத் ரித்வான் மற்றும் பஹ்ரைனைச் சேர்ந்த மிசாப் ஈஸா ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ரித்வான் 200,000 திர்ஹம்களையும், ஈஸா 150,000 திர்ஹம்களையும் பெற்றுக் கொண்டனர்.

அஹ்மத் யசூரி (எகிப்து), காலித் அபூபக்கர் (யெமன்), கலீல் தாஹிர் (லிபியா), மப்வானா அஸ்ஸா (தான்சானியா), அம்மா புகிஸ் (சவூதி அரேபியா), நாசிர் சர்ராம் (குவைத்), முஹம்மத் லட்ராச் (மொரோக்கோ) மற்றும் முஹம்மத் ஒஸ்மான் (சூடான்) ஆகியோர் அடுத்தடுத்த பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.

80 மற்றும் 80க்கு மேல் புள்ளிகள் பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் 30,000 திர்ஹம்களும், 70 – 79 வரை புள்ளிகள் பெற்றோருக்கு 25,000 திர்ஹம்களும், 70க்குக் குறைவாகப் பெற்றோருக்கு 20,000 திர்ஹம்களும் வழங்கப்பட்டன.

திங்கட்கிழமை இரவு, துபாய் வர்த்தக சதுக்கத்தில் இடம்பெற்ற நிறைவு விழாவில், சூடானின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் ஸ்வார் அல்தஹப் மற்றும் 70 போட்டியாளர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 சிறந்த போட்டியாளர்களுக்கு கௌரவமளித்தார். போட்டியாளர்களுக்கு பணப்பரிசுககளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Thanks; iqna

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top